Showing posts with label Micheal Chabon. Show all posts
Showing posts with label Micheal Chabon. Show all posts

Friday, April 11, 2014

வாழ்க்கையை மீட்டெடுக்கும் கற்பனை

சொல்வனம் இதழில் வெளிவந்தது (http://solvanam.com/?p=32177)
-------------------------
1939ஆம் ஆண்டு. ஆறு வருடங்கள் கழித்து முடியப் போகும் வெறியாட்டத்தை ஹிட்லர் துவக்கியிருந்த நேரம். உலகம் அவனுடைய எண்ணங்களின் தீவிரத்தையும், அது உண்டாக்கப்போகும் பேரழிவையும் முழுதும் புரிந்து கொள்ளாமலும், அல்லது புரிந்தும் அதை ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்கள் என ஒதுக்கியிருந்த காலம். (Auschwitz முதலிய நாஜி வதைமுகாம்களைக் கைப்பற்றும்வரை அதை உலகம் முழுமையாக உணரவில்லை.)
அமெரிக்கா 30களின் பொருளாதார பின்னடைவிலிருந்து இன்னும் முழுதும் மீளாத காலம். தனித்திருத்தல் (isolationism) கொள்கையை இன்னும் பின்பற்றுவதால் போரில் நேச நாடுகள் அணியில் இதுவரை அமெரிக்கா சேரவில்லை. அதிநாயகர்கள் (superheroes), அமெரிக்க வானில் பறக்கத் தொடங்கியிருக்கும், ‘காமிக்ஸ்’ என்னும் ழானர் பிரபலமாகிக்கொண்டிருக்கும் காலம்.
இந்தக் காலகட்டத்தில் காமிக்ஸில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள ‘Sammy Klayman’ (க்ளே) என்னும் 19 வயது அமெரிக்க இளைஞன், 17 வயதான தன் ஒன்று விட்ட சகோதரன் ‘Josef (Joe) Kavalier’ ‘ஜோவை’ முதல் முறையாகச் சந்திப்பதோடு ‘மைகல் ஷேபன்’ (Micheal Chabon) எழுதிய ‘The Amazing Adventures of Kavalier & Clay’ நாவல் ஆரம்பிக்கிறது.
ஜோ ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட Prague நகரத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறான். ஹூடினி (Houdini) போல் புகழ் பெற்ற ‘Escape Artist’ஆக பயிற்சி எடுத்துள்ள அவன், ஓவியக் கல்லூரியில் பயின்றுள்ள ஓவியனும்கூட. தன் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்து வருவதே ஜோவின் லட்சியமாக உள்ளது. இந்த இருவரின் சந்திப்பு, அவர்கள் கூட்டாக காமிக்ஸ் துறையில் அடையப்போகும் வெற்றிகளுக்கு அச்சாரம் இடுகிறது. அவர்கள் உருவாக்கும் காமிக்ஸ் நாயகர்கள்/ கதைகளுக்கு சவால் விடும் அற்புத சாகசங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. இங்கு சாகசம், போன்ற வார்த்தைகள் பக்கத்திற்கு பக்கம் சண்டைகள், பரபரப்பு போன்றவற்றைக் குறிக்கவில்லை. ஷேபன்(Chabon) ஒரு இடத்தில் .
“… cabinet of mysteries that was the life of an ordinary man”
என்று சொல்வது போல், சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழ்நிலையில் சிக்கி, பல நம்ப இயலாத, அதிநாயகர்கள் கதைகளில் எதிர்கொள்வதற்கு சற்றும் சளைக்காத சம்பவங்களைச் சந்திப்பதை விவரிக்கும் நாவல் இது. குண்டுகள் வெடிப்பது, பறப்பது என்றெல்லாம் இல்லாமலும் எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கையும் அவனளவில் சாகசம்தான், இல்லையா?.
இருவரையும் சந்திக்கவைத்து விட்டு, கதையை நிதானமாக புனைகிறார் ஷேபன். அவர்களுக்கு மட்டுமல்ல, துணை பாத்திரங்களுக்கும் தனித்தன்மை கொடுக்கிறார். இவை அனைத்தும் இணைந்து இந்த நாவலின் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன.
ஷேபன் காலத்தில் பின்னோக்கி சென்று, Prague ஜெர்மனியின் பிடியில் அகப்பட்ட ஆரம்ப காலத்தை பற்றிய சித்திரத்தை அளிக்கிறார். Pragueஇல் உள்ள யூதர்கள் மீது அடக்குமுறை ஆரம்பிக்கப்பட்டு விட்டாலும்,அவர்கள் அது எந்தளவிற்கு போகும் என்பதை இன்னும் உணரவில்லை. ஆடு, மாடுகள் போல் யூதர்கள் அடைக்கப்பட்டு, வதைமுகாம்களுக்கு செல்லும் ரயில்கள் இன்னும் பயணிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, தங்கள் உடைமைகள், இருப்பிடம், கௌரவம் இவற்றை இழக்கத் தொடங்கி உள்ள காலம் அது. அவர்கள் தாய்நாடு அடையாளம் தெரியாத அந்நிய தேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்களான ஜோவின் பெற்றோர் வேலைகளை இழந்து விட்டார்கள். ஜோவை எப்படியாவது அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்று முயல்கிறார்கள்.
ஒரு இனம் தங்கள் மீது பெரும் இடி விழப் போவதை அச்சத்துடன் எதிர்பார்த்திருக்கும் காலத்தைக் காட்டும் அதேநேரத்தில் நம்பிக்கை முற்றிலும் இழக்காத காலமும்கூட அது என்று சொல்கிறார். நாஜி பிரசாரத்தை நம்பி (அல்லது வேறு வழியில்லாத நிலையில் நம்ப விரும்பி), உடைமைகள் இழந்தாலும் இதை விட மோசமாக எதுவும் நடக்காது என்று தங்களையே தேற்றிக்கொள்கிற காலம். ‘Kornblum’ என்ற தன்னுடைய மாஜிக் ஆசிரியர் உதவியுடன் ஜோ தப்புகிறான். அவன் தப்பும் விதம் எந்த ஒரு அதிநாயக சாகசத்திற்கும் சளைத்ததல்ல, ஆனால் நம்மால் அதை ரசிக்க முடியாது.
காமிக்ஸில் ஆர்வமிருந்தாலும் க்ளே அதை கலையாகப் பார்க்கிறான் என்று சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகி வரும் துறை என்பதே அவனை அதன்பால் அதிகம் ஈர்க்கிறது. அவன் சிறந்த ஓவியனும் கிடையாது, ஜோவோ நல்ல ஓவியன் என்றாலும் காமிக்ஸ் பற்றி எதுவும் தெரிந்திராதவன், அவனுக்கு தன் குடும்பத்தை அமெரிக்கா அழைத்து வர பணம் தேவை. ஆக இருவரும் காமிக்ஸை கலையாக அணுகாமல் அவரவர் தேவைக்குப் பொருந்திவரும் துறையாகவே கருதி அதில் நுழைகிறார்கள். காமிக்ஸ் படைப்புக்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பது அவர்களை அந்தக் காலத்திய மற்ற காமிக்ஸ் படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது.
ஒரு படைப்பில் அதை உருவாக்கிய கலைஞன் எங்கு, எந்தளவுக்கு உள்ளான், அவனுடைய அனுபவங்கள் அந்தப் படைப்பை உருவாக்குவதில் என்ன பங்கு வகிக்கின்றன போன்ற விஷயங்களை ஷேபன் நுட்பமாக காட்டுகிறார் . அவர்கள் உருவாக்கும் அதிநாயகனின் பெயர் ‘Escapist’ (தப்பிப்பவன்), அவனின் முக்கிய எதிரி ‘ஹிட்லர்’. அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை முக்கிய எதிரியாக உருவகிப்பதும் ஜோவே. ஆனால் அப்படிச் செய்தால் அது ஏற்படுத்தக் கூடிய சலசலப்பை, அதன் மூலம் இந்தத் துறையில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியை முதலில் கணிப்பவன் க்ளேதான். காமிக்ஸில் அதிக நம்பிக்கை இல்லாத, அவர்கள் வேலை செய்யும் பத்திரிகை முதலாளிகளையும் ஒப்புக் கொள்ளச் செய்பவனும் அவனே.
க்ளே போலியோவால் பாதிக்கப்பட்டவன், Escapistஉம் அப்படியே. escape artistஆக பயிற்சி பெற்ற ஜோ போல், Escapistஇன் பலமும் அதுவே. பெற்றோரை காப்பாற்ற வேண்டுமென்ற ஜோவின் லட்சியத்தின் வெளிப்பாடாக, Escapistஇன் நோக்கம், எங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தாலும், அவர்களை விடுவித்து அங்கிருந்து தப்பிக்க வைப்பது. இந்த ஒற்றுமைகள் நேரடியாகக் குறிப்பிடப்படாமல் கதையின் போக்கில், வாசகன் புரிந்து கொள்வது போல் அமைக்கப்பட்டுள்ளன. அதுவரை போரில் கலந்து கொள்ளாத அமெரிக்காவில், இவர்கள் படைப்புக்கள் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. ஹிட்லர் எதிரியாக இருப்பதால் உண்டாகும் பரபரப்பால் அவர்களின் படைப்புக்களுக்கு கிடைக்கும் ஆரம்ப கால வெற்றி, அவற்றின் தரத்தால் தொடர்கிறது.
தன் நாவலின் பிரபஞ்சத்திற்குள், ஒவ்வொரு பாத்திரத்திற்கும் நுண்மைகூடிய, மிக விரிவான தனி உலகை சித்தரிக்கும் ஷேபன் அதே நேரம், சற்று விலகியும் நின்று வாசகனின் கற்பனைக்கு சில விஷயங்களை .விட்டு விடுகிறார். ரோஸா சாக்ஸ் என்ற பெண்ணிடம் காதல் கொள்கிறான் ஜோ. பணம், உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நண்பன்/ காதலி என இருந்தாலும் ஜோ மன உளைச்சலில் உள்ளான். தன் குடும்பம் தவிக்கையில் தான் மட்டும் தப்பி விட்டோமே என்ற குற்ற உணர்வு (survivor guilt) அவனை வாட்டுகிறது. தான் சந்தோஷமாக இருப்பது குறித்து வருந்துகிறான். ஹிட்லரை கதைகளில் வெல்வது, ஜோவை ஆற்றுப்படுத்தினாலும், அந்தக் கலையும் ஒரு கட்டத்திற்கு மேல் அவனைக் கைவிடுகிறது. நிஜத்தில் ஹிட்லர் பிரான்ஸ் நாட்டையும் கைப்பற்றி, மேலும் மேலும் வெற்றிகள் பெற, தன் கலையின் பால் ஏமாற்றம் அடைகிறான் ஜோ.
ஜோவை விட க்ளே எளிதில் புரிந்து கொள்ள முடியாதவனாக (ambiguous) இருக்கிறான். அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதாக இல்லை. அவனை செலுத்துவது எது, கலையா, பணமா, புகழா அல்லது வேறேதோ ஒன்றா? நாவல் செல்லச் செல்ல ஓரளவுக்கு தெளிவான சித்திரம் தெரிகிறது. க்ளே இரு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்க்கும் இடமும், அப்போது அவனின் மனநிலையும், ஜோ-ரோஸா உறவைப் பற்றி எண்ணும்போது why he isn’t jealous of Rosa (அவன் ஜோவை அல்லாமல் ரோஸாவை இங்கு சுட்டுகிறான் என்பதுதான் இங்கு முக்கியம்) என்று அவன் யோசிப்பதும் அவனுடைய பாலியல் விழைவை ஷேபன் மென்மையாக குறிப்புணர்த்தும் இடங்கள்.
நாவலின் மற்ற துணை பாத்திரங்களுக்கும் அவர்களுக்குரிய தனித்தன்மையை ஷேபன் தருகிறார். எதிலும் குறை கண்டுபிடிக்கும் அவர்கள் பத்திரிகை ஆசிரியர் ‘George Deasey’ (இவரின் சுட்டெரிக்கும் நக்கலை யாரும் ரசிக்கலாம், அதன் இலக்கு நாமாக இல்லாத பட்சத்தில்), ‘modest but genuine conscience’ (ஷேபனின் வார்த்தைகளில்) உடைய அவர்கள் வேலை செய்யும் பத்திரிக்கையின் அதிபர் ‘Sheldon Anapol’ (ஷேபனின் கூற்றுக்கேற்ப, சட்டப்படி நியாயமான, ஆனால் அறமற்ற வகையில் நம் நாயகர்களின் லாபத்தை பெரிதும் கையகப்படுத்திக் கொள்கிறார்), க்ளேவின் பெற்றோர் என அவர்களின் உலகம் முழுமையாக, நாவலை ஒட்டி உள்ளது. நாவலில் பெரிதும் துணை பாத்திரமாக வரும் ரோஸா இறுதிப் பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறார். அவநம்பிக்கைவாதியாக (cynic) ‘George ‘ மாற காரணம் என்ன, அவர் அடைந்த தோல்விகளா, வயலின் கலைஞனாக இருந்த ‘Sheldon’ ஏன் முழு முதலாளித்துவ (சக கலைஞர்களின் நியாயமான லாபத்தை அபகரிக்கும்) பாதையை தேர்வு செய்தார் என இவர்களைப் பற்றி தனி நாவலே எழுதக்கூடிய அளவிற்கு சில விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் ஷேபன்.
நம் நாயகர்களின் கதைகளோடு, அவர்கள் உருவாக்கும் அதிநாயகர்களின் கதைகளும் வருகின்றன. தொழில்முறை எழுத்தாளர்களல்லாத, ஏதோ ஒரு வேகத்தில் உந்தப்பட்ட இளம் வயதுடையவர்கள் உருவாக்கும் படைப்புகள் என்பதால் ஒரு rawnessஓடு இந்தக் கதைகள் இருப்பது இயல்பாகவே உள்ளது.
ஷேபனும் காமிக்ஸ் ஆர்வலரே. காமிக்ஸை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துபவர். மன சஞ்சலமான ஒரு நேரத்தில், ஜோ ஆர்ச்சி (‘Archie’) காமிக் இதழ் ஒன்றைப் படித்தது குறித்து .
The escape from reality was, he felt—especially right after the war—a worthy challenge… The pain of his loss—though he would never have spoken of it in those terms—was always with him in those days, a cold smooth ball lodged in his chest, just behind his sternum.
For that half hour spent in the dappled shade of the Douglas firs, reading Betty and Veronica, the icy ball had melted away without him even noticing. That was the magic—not the apparent magic of a silk-hatted card-palmer, or the bold, brute trickery of the escape artist,but the genuine magic of art. It was a mark of how fucked-up and broken was the world—the reality—that had swallowed his home and his family that such a feat of escape, by no means easy to pull off, should remain so universally despised.
என்று எழுதுகிறார்.
ஆர்ச்சி காமிக்ஸ் மற்றும் கலை பற்றி ஒரு சேர பேச முடியுமா என்று நாம் நினைக்கலாம். அமெரிக்க pop-cultureஇல் அதற்குரிய இடம் நாம் அறிந்ததே. இங்கு காமிக்ஸ் ஜோவிற்கு கிளர்ச்சியையோ, போலியான மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை. வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவனுக்கு சிறிது நேரம் மன அமைதியைக் கொடுக்கிறது எனும்போது அதை ஏன் பழிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஜோ பணத்திற்காக முதலில் இந்தத் துறையில் ஈடுபட்டாலும் பிறகு அதை கலையாகக் காண்கிறான். அவன் ‘Escape Artist’ஆக பயின்றதும், காமிக்ஸில் செய்வதும் தொடர்புடையவைதான். பௌதீக உலகம் நம் மீது திணிக்கும் கட்டுப்பாடுகளை உடைத்து எல்லைகளில்லாத, எந்தத் தளைகளும் இல்லாத உலகத்தை நோக்கிததான் இரண்டும் நம்மைக் கொண்டுசெல்கின்றன. ஜோ சொல்வது போல்
“…the expression of an yearning that a few magic words and an artful hand might produce something – exempt from the crushing strictures, from the ills cruelties, and inevitable failures of the greater creation”
இந்த ஏக்கம் (yearning) தான் ஜோவை காமிக்ஸ் உலகிற்குள் இன்னும் ஆழமாக இழுத்துக் கொண்டு, அவனுடைய மனநிலை முற்றிலும் கெடாமல் பார்த்துக் கொள்கிறது எனும் போது மட்டையடியாக காமிக்ஸ், கலை அல்ல என்று சொல்ல முடியுமா? ‘long underwear’ (ஷேபனின் வார்த்தைகளில்) அணிந்திராத, எப்போதும் தீவிரமாக உலா வரும் பாத்திரங்கள் இருப்பதாலேயே ஒரு சராசரி ‘பொது இலக்கியப்’ படைப்பு காமிக்ஸை விடச் சிறந்தது என்று கொள்ள முடியுமா? எல்லா கலைகளையும் போல் இதிலும் சிறந்த, மோசமான, சுமாரான படைப்புக்கள் உள்ளன அல்லவா?
ஆனால் க்ளே முன்பே சொன்னது போல காமிக்ஸை மலிவான கலையாகத்தான் பார்க்கிறான். அவன் தாய்கூட இதை அப்படித்தான் பார்க்கிறார், காமிக்ஸ் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் பணம், புகழ் அவரின் எண்ணத்தை மாற்றுவதில்லை, காமிக்ஸ் என்பது எப்போது வேண்டுமானாலும் வழக்கொழிந்து போகும் என்பதே அவர் தரப்பு. க்ளே ஒரு (அவனால் முடிக்க முடியாத) ‘நாவல்’எழுத முயல்வதுகூட ஒரு ‘இலக்கிய’ அங்கீகாரம் வேண்டித்தான்.
ஷேபனின் மிக விரிவான கதைப் பின்னல் ஒரு சில இடங்களில் நாவலின் மைய இழையிலிருந்து விலகிச் செல்கிறது. ஒரு துயரச் சம்பவத்தைப் பற்றி ஜோ அறிந்தபிறகு நடப்பதைப் பார்ப்போம். அவனுடைய குற்ற உணர்வு (survivor guilt) இன்னும் மோசமாகிறது. அமெரிக்க ஜெர்மானியர்களுடன் வீண் சண்டை பிடித்து, அவர்களிடம் அடிபடுவது போன்ற தன்னைத்தானே வறுத்திக்கொள்கிற செயல்களைச் செய்கிறான். இது புரிந்துகொள்ளக் கூடியதே. இப்படி நடக்குமா என்பதல்ல இங்கு கேள்வி, மிகவும் மனமுடைந்த நிலையில் மனிதன் என்ன செய்வான் என்று யார்தான் உறுதியாகச் சொல்ல முடியும்? ஆனால் இந்த வம்புச் சண்டை பற்றிய விவரிப்புக்கள் தொடர்ந்து பல பக்கங்கள் விரியும்போது ஷேபன் ஜோவுடன் நாம் இன்னும் பச்சாதாபம் கொள்ளவே இதை வலிந்து திணிக்கிறார் என்று தோன்றுகிறது.
பொதுவாக ஜோ/ரோஸா இருவருக்கிடையே உள்ள உறவை, க்ளே/ட்ரேசி உறவைவிட நன்றாகக் கையாண்டிருக்கிறார். க்ளே தன் பாலியல் விழைவு பற்றி குழப்பம் உடையவனாக இருப்பதால் அவனின் உறவுகளில் சஞ்சலம், நிலையின்மை, அதில் அவனால் பொருத்திக் கொள்ள முடியாத நிலை (awkwardness) இருப்பது இயல்பானதே. ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் இரவில், க்ளே டிரேசியுடன் இணைவது போன்ற சில வகைமாதிரி (cliche) சூழல்களும் அவன் உறவுகளின் சித்தரிப்பில் இருப்பது துரதிருஷ்டவசமானது.
இருவரின் காமிக்ஸால் கோபமுற்று, இனவெறி கொண்ட சில அமெரிக்க ஜெர்மானியர்கள் (domiciled Germans) அவர்களுக்கு தீங்கிழைக்க முயல்வது ஒரு உப கதையாக நாவலில் உள்ளது. போரின்போது அமெரிக்க ஜெர்மனியர்களின் மன உணர்வுகள்,மற்ற அமெரிக்கர்கள் பொதுவாக அவர்களை எப்படிப் பார்த்தனர், போருக்கு முன் அவர்களுடன் இருந்த உறவு எப்படி மாறியது என இதை இன்னும் விரிவாகத் தொட்டிருக்கலாம். ஆனால் நாவலில் உள்ள இந்தப் பகுதிகள், அதன் இயல்பான போக்கோடு ஒட்டாமல் இருக்கிறது.
ஜோ, க்ளே இருவரும் தங்கள் வாழ்க்கையுடன் ஓரளவுக்கு சமரசம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நிகழும் இரு (தனித்தனி) சம்பவங்கள் அவர்களை புரட்டிப் போட்டு, அவர்கள் செல்லும் திசையையே மாற்றி விடுகின்றன. இங்கு ஒரு விஷயம். இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடக்கின்றன. சரி இதை கவித்துவ உரிமை என்று கொள்ளலாம். ஆனால் அன்றுதான் ‘Pearl Harbor’ தாக்குதலும் நடக்கிறது எனும்போது, இதுவும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
The true magic of this broken world lay in the ability of the things it contained to vanish, to become so thoroughly lost, that they might never have existed in the first place
என்று நாவலில் ஒரு இடத்தில் ஷேபன் சொல்கிறார். அன்பு மட்டுமே இந்த மாஜிக்கை வெல்ல முடியும். அது மட்டுமே மறைந்த விஷயங்களை, நினைவில் வைத்திருந்து ஒரு வேளை அந்த விஷயம் மீண்டும் கிடைத்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்யும். பகிர்ந்து கொள்ள யாருமில்லாதது என்ன வாழ்க்கை? தனக்கேற்பட்ட அனுபவங்களிளால் ஜோ யாருமில்லாமல் இருக்கக்கூடிய சூழல் பற்றிய பயத்தால் எப்போதுமே பீடிக்கப்பட்டிருக்கிறான், அதுவே அவனை அலைக்கழிக்கிறது, அதுவே அவனை தன் (கர்ப்பமாக உள்ள ) காதலி/ நண்பன் இருவரையும் பிரிந்து செல்ல வைக்கிறது.
நாவலின் கடைசி பகுதி ‘Pearl Harbor’ சம்பவத்திற்கு பத்து ஆண்டுகளுக்குப் பின் நடக்கிறது. போருக்குப் பின் அதிநாயகர்கள் வரும் காமிக்ஸின் அபிரித தேவை குறைகிறது.
ஒரு கலைஞன் அறிவுஜீவி என்றோ முட்டாள் என்றோ குறிப்பிடப்பட்டாலும், தன் படைப்புக்கள் ஏதோ ஒரு வகையில் எதிர்வினைகளை உருவாக்குகின்றன என ஆறுதல் கொள்ளலாம், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டலோ சமூகம் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படலாம். ஆனால் அவனுடைய இருப்பு அங்கீகரிக்கப்பட்டு, அதே நேரம் பொருட்படுத்தத் தகாதவனாக (mediocre) அவன் அலட்சியப்படுத்தப்பட்டால் அதை அவனால் தாங்க முடியாது. அதுவும் க்ளே போன்ற, தன் துறையில் உச்சத்தை அடைந்த ஒருவர் இப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்வது மிகக் கடினம். க்ளே அந்த நிலையில் உள்ளான். வாழ்க்கையை ஓட்ட சராசரி படைப்புக்களை உருவாக்குபவனாக அவன் உள்ளான். ஒரு ‘இலக்கிய நாவல்’ எழுதும் அவன் முயற்சி முடிவுறவில்லை .
ஜோ அவர்கள் வாழ்விலிருந்து விலகிய பிறகு, க்ளே ரோஸியை மணந்து அவள் மகளுடன் வாழ்கிறான்.இதை நட்பிற்கான தியாகமாகவோ, அல்லது க்ளே தன் பாலியல் குறித்த மற்றவர்களின் சந்தேகங்களைப் போக்கச் செய்ததாகவோ ஷேபன் சொல்வதில்லை. அதை வாசகனின் முடிவுக்கு விட்டு விடுகிறார். மிகக் குறைவாகவே வரும், ஜோவின் மகன் டாமியுடன் க்ளே கொண்டிருக்கும் உறவு குறித்தப் பகுதிகளும் வாசகனை நாவல் முடிந்தும் யோசிக்க வைப்பவை.
இந்நிலையில் ஜோ மீண்டும் அவர்கள் வாழ்வுக்குள் நுழைகிறான். ரோஸா, க்ளே, ஜோ மூவரும் க்ளே வீட்டில் பேசிக்கொள்கிறார்கள். ஜோ தன் செய்கைகளுக்கு சில காரணங்கள், அது குறித்த குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்த முயலும்போது க்ளே
“Christ, Joe, you fucking idiot,” Sammy said. “We love you”.
என்கிறான். இது ஒரு எளிய வாக்கியம்தான். அதில் பொதிந்திருக்கும் அன்போ மிக ஆழமானது. நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் நாம் சொல்வதைக் கேட்காமல், நம் உதவியை ஏற்றுக்கொள்ளாமல் துன்புறும் போது அவர் மேல் நாம் கொண்டுள்ள அன்பு, கோபமாக/ஆதங்கமாக வெளிப்படும் அல்லவா.
(பத்தாண்டுகள் சென்று விட்டாலும், அந்த மூவரிடையே உள்ள அன்பு முன்னளவுக்கு இல்லாவிட்டாலும், முற்றிலும் மறைந்து விட்டிருக்காது இல்லையா). இப்படிப் பட்ட சூழலில் வியாக்கியானம் பண்ணுவது போல் பேசுவதைவிட இதுவே இயல்பாக உள்ளது. (love means never to say you’re sorry’ என்ற வரி அதிகப்படியான ஒன்றாக இருந்தாலும், அதிலும் ஒரு உண்மை உள்ளது அல்லவா?)
இந்தப் பத்தியை படிக்கும்போது, இந்த வரியை அதிகமாகப் புகழ்வது போல் தோன்றலாம். ஆனால் நாவலில் மூவருக்கிடையே உள்ள உறவோடு இந்தக் காட்சியை இணைத்துப் பார்க்கும்போது இதன் தாக்கம் புரியும். இவ்வளவு சுருக்கமாக, உச்சகட்ட மனவெழுச்சியை ஏற்படுத்தும் ஒரு காட்சியை கடந்த நான்கைந்து ஆண்டுகளில் நான் அதிகம் படித்ததில்லை.
காமிக்ஸ் கலை/ கலையல்ல என்ற விவாதங்களைத் தாண்டி காமிக்ஸ் சமூகத்திற்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும் என்றும் ஒரு தரப்பு அன்று(இன்றும்) இருந்துள்ளது .’Fredric Wertham’ என்ற உளவியல் மருத்துவரால் 1954இல் எழுதப்பட்ட ‘ Seduction of the Innocent’ என்ற நூல் காமிக்ஸ் போன்ற எழுத்து வகைகள் சமூகத்தில் ‘ஓர்பால் சேர்க்கை’ போன்ற ‘ஒழுக்கக் கேடுகளை’ ஊக்குவிக்கின்றன என்று கூறியது. (Batman/Robin உறவு குறித்த ஹேஷ்யங்கள் இன்றும் உள்ளன) அமெரிக்க செனட் செயற்குழு ஒன்று இது குறித்த விசாரணையும் மேற்கொண்டது. இதில் விசாரிக்கப்படும் க்ளே, அவனுடைய பாலியல் விழைவு குறித்த சந்தேகங்களால் அவமானப்படுத்தப்படுகிறான்.
தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் அந்த விசாரணை பலரால் பார்க்கப்பட்டு அவர்களின் கேலிக்குள்ளாகிறான். ஆனால் இது ஒரு விதத்தில் நன்மையையும் செய்கிறது. வாழ்வு முழுதும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அவன், உலகை நேரடியாக எதிர்கொள்ள முடிவெடுக்கிறான். ஜோ/ ரோஸி தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க முயல்கிறார்கள்.
நட்பு, அன்பு, காதல் என பல இழைகள் இருக்கும் இந்த நாவலின் எல்லாவற்றைவிட முக்கியமானதாக இருப்பதை ஒரு பாத்திரம் சொல்வதின் மூலம் பார்ப்போம்.
“there is no force more powerful than that of an unbridled imagination”.
இதுதான் இந்த நாவல். அதீதமான விஷயங்களை யோசிப்பதும், கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க முயல்வதுமே நாம் எண்ணிப் பார்த்திராத பல விஷயங்களை சாதித்திருக்கின்றன. எனவே தான் எல்லா காலத்திலும் அரசுகள் கற்பனைக்கு கடிவாளம் போட முயன்றுள்ளன.
இந்த விசைதான் ஜோவை எப்படியாவது தன் குடும்பத்தைக் காக்க முயற்சி செய்ய வைக்கிறது, பதின்வயதிலேயே க்ளே ஒரு காமிக் சாம்ராஜ்யம் அமைப்பதைப் பற்றி கனவு காண வைக்கிறது. கற்பனைகள் அனைத்தும் நனவாவதில்லை. ஜோ/ க்ளேவின் கற்பனைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களுக்கு சில நேரம் வெற்றி, சில நேரம் தோல்வி என மாறி மாறி வந்து ஒரு கட்டத்தில் கற்பனை அணைந்தே விட்டது போல் தோன்றினாலும், நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருக்கிறது.
இறுதியில், ஜோ வந்தபிறகு எடுக்கப்படும் முடிவுகளோடு, இவர்கள் வாழ்க்கையில் அந்தக் கங்கு மீண்டும் கொழுந்துவிட்டு எரியும்/ எரிய வேண்டும் என்ற நம்பிக்கையோடு/ விருப்பத்தோடு நாவலின் பாத்திரங்களிடமிருந்து நாம் விடைபெறுகிறோம்.
- See more at: http://solvanam.com/?p=32177#sthash.9cixKH88.dpuf

Monday, March 25, 2013

The Amazing Adventures of Kavalier & Clay - Micheal Chabon - The redeeming power of imagination

It is 1939, Hitler has just started his orgy of violence that would culminate his own Valhalla 6 years later, the world is as yet fully unaware of the schemes he has in mind or rather even if aware they are more inclined to dismiss it as a mad man's ravings, underestimating him .  America is still following the policy of isolationism and has not yet got into the war, as it is taking ginger steps after the great depression of the 30's. It is also the period when the comic book genre has taken off, with superheroes beginning to do the skies of America. Sammy Klayman (Clay), a 19 year old boy, comic book enthusiast meets for the first time his cousin ' Josef (Joe) Kavalier (aged 17), who has escaped from German occupied Prague. Joe has trained to be an escape artist, has also studied in the art school and his only aim right now is to bring his family also to America. Their meeting sets the stage for their partnership in the comic book industry and also for their 'Amazing Adventures' which is as astonishing as the comic book heroes/stories they created and poignant in a way that most of us cannot even imagine. If the words 'amazing' and 'adventures' invoke visuals of pulse pounding action across the pages you would be mistaken. As Chabon says at a point in the novel "... cabinet of mysteries that was the life of an ordinary man", this is the story of ordinary men caught up in extraordinary situations and isn't each individual life an adventure in it's own right, it doesn't need guns blazing, bombs dropping to be an adventure. Chabon takes his time unraveling the story of his protagonists, creating a separate world for them and even the secondary characters, giving distinct characteristics to each, the entirety of which forms the universe of this novel.


Once the boys meet up, Chabon goes back in time and shows us a portrait of Prague under German occupation. The Jews of Prague have started to be prosecuted, but they are still not aware of how far this depravity of the Nazis would go. The crowded trains to the concentration camp have not yet started running, but the Jews are being slowly stripped of their material possessions and their dignity. What was once one's homeland is becoming a completely alien place, a place which they cannot recognize even though they have lived their entire lives there.  Joe's parents, both doctors have lost their jobs and are trying their best to get at least Joe to America. Generally when we read about Nazi atrocities, it is about the concentration camps when the blow has fallen on them. But here, in this short section, Chabon captures a moment in time where they are waiting for the blow to fall, with no one aware of the exact nature of the blow or even when (of if at all ) if it fall. There is still a hope against hope that things may not actually turn to be as bad as they expect as the Nazi propaganda puts a completely different spin on what it's doing and why is it being done. It's what people in the sub-continent would have felt in the months leading up to the partition, it is what the Tamils are facing in Sri Lanka with their homes, lands being overrun by outsiders, a feeling of unwillingness to let go of the place and possessions of their homeland and at the same time aware of a darkness descending on them. This awareness is what prompts the Jews to send at least some members of their family to America at the earliest. Joe, with the help of his teacher in magic 'Kornblum', escapes to America making a horrifying journey in coffin. (This is not germane to this novel, but whenever I read about WWII, Jews or Holocaust, I cannot but imagine how a race that suffered like this can think of inflicting the same suffering on their fellow human  beings just because they belong to another race and however much one imagines, reads both sides of the story, the horrific events that have been happening in Palestine doesn't make complete sense, but then wouldn't it be too much to expect any orderliness in this dysfunctional world)

Though Clay is a comic book enthusiast he is not much of an artist, Joe on the other hand has artistic tendencies but doesn't have any idea 
about this genre, being as he is from Prague. Clay wants to make it big in the world and comic book is the one avenue that opens up to him on Joe's arrival. In fact throughout the novel, Clay looks down on 'comics' as an inferior art form and the only reason he gets into it is because he has caught the zeitgeist of the time and he has got an able collaborator in Joe. Joe on his part needs money and lots of it to try to bring his family to the U.S and so they form a partnership to create comic books. The way they go about it becomes the major difference between their works and their competitors. As Clay and Joe discuss, the 'why' part of the history of the superhero is what makes each one them unique and they hit upon a truly unique 'why'. Their hero is the 'Escapist' who frees oppressed  people anywhere in the world and his main enemy, a character modeled on Hitler and the Nazis. In a period where America is still not into the war, this shakes up quite a few people, getting the initial eyeballs and the quality of their work takes over and the series becomes a big hit. The way Chabon details their creation of the super hero is interesting in that it once again raises the question of how much of the artist is present in his art. Clay has suffered from polio and so does the alter ego of the 'Escapist'. Joe's training and experiences as an escape artist (picking locks, handcuffs etc) form the basis of what their super hero does. And the main villain is the product of Joe's experience though it must be said that it is Clay who first understands the potential of showing Hitler as the villain, even convincing their bosses when they are  skeptical about it.
Chabon creates a minutely detailed world for each character going deeper into their lives, but hanging back just that little  bit for us to imagine the rest. Joe meets and falls in love with 'Rosa Saks' an artist in her own right. But even with good money coming in and a person (actually 2 including Clay) to share his feelings, Joe is a nowhere man. Wracked with survivors guilt at his having made his life in America while his family languishes in Prague, he is mortified to find himself happy. And his art through which he was able to get his own back at Hitler fails to fortify him after a time because after all the high that the destruction of Hitler in comics gives him, he has to get back to the reality which states that Hitler has now overrun France too. The sometimes insurmountable gulf between reality and imagination, the invisible barrier between art and life starts haunting him, and unable to either cross the gulf or tear the barrier,  he starts becoming disillusioned with his works. Clay on the other hand is detailed a bit more ambiguously. Where in the case of Joe you are pretty much sure about or can at least guess his motivations, with Clay you are on less sure ground and Chabon adds to the ambiguity by treading softly in his world and retreating more quickly than in Joe's case. Is his motivation comic art, money, fame or all there is something we don't know right at the beginning (in Joe we know that it is money more than art) and only as the novel progresses we understand him more.  There are a couple of instances in the novel, a passage on the confusion that Clay feels when he sees two men kissing and there is the line where he ruminates about the relationship between Joe and Rosa and thinks why he isn't jealous of Rosa where Chabon tenderly explores his sexual orientation, dropping hints for what would follow next.

The other characters are also given their due, whether it be the duo's deliciously acerbic editor 'George Deasey' (delicious only if are a spectator and not on the receiving end of his caustic remarks), their one time artist turned full fledged capitalist boss 'Sheldon Anapol' who in the words of Chabon has a 'modest but genuine conscience' which however doesn't stop him from ripping off the duo (though it is all legal to be fair to Anapol) or Clay's parents. Rosa is mostly a peripheral character until the last portion where she comes into her own. One could write a separate novel on many of these characters alone, say what made George such a cynic, what failure pushed him to be such a unforgiving judge of the written word, what was the moment when the violinist Sheldon became a ruthless boss, in both cases the question being 'when did art lose out to survival and how does the artist live with it'. There is also a sub-plot involving racist domiciled Germans/Aryans in America who take offence at the duo's comic series and set out to hurt them. This sub-plot could have been developed further, giving an insight into how did the Germans domiciled in America live during the war, how did the general public react to them, did their feelings towards the Germans change and if so how did it change, but as such it just seems to be jutting out of the natural progression of the narrative.

Interleaved between the narrative of the lives of these characters are the stories of the comic heroes that the duo create. The stories are not fully fleshed out and rough at the edges which is want one can expect from two teenagers and in that context they fit perfectly into the scope the novel. A passionate advocate of comics, Chabon makes a plea for it be treated more seriously. When Joe in a moment of disquiet picks up a Archie comic and reads he feels

The escape from reality was, he felt—especially right after the war—a worthy challenge… The pain of his loss—though he would never have spoken of it in those terms—was always with him in those days, a cold smooth ball lodged in his chest, just behind his sternum. 
For that half hour spent in the dappled shade of the Douglas firs, reading Betty and Veronica, the icy ball had melted away without him even noticing. That was the magic—not the apparent magic of a silk-hatted card-palmer, or the bold, brute trickery of the escape artist, 
but the genuine magic of art. It was a mark of how fucked-up and broken was the world—the reality—that had swallowed his home and his family that such a feat of escape, by no means easy to pull off, should remain so universally despised.

'Archie comics and art? duh' could be the response to what Chabon says, but eescapism is not necessarily always a bad thing, and it need not be treated as something to be looked down upon, especially if it does offer some solace to the reader. Given his childhood vocation for magic and escape tricks it's natural that Joe is drawn towards comics (though money is a big factor Joe genuinely likes the genre) . Even if there had been no Hitler, Joe would have gotten into comics, maybe not immediately but once the genre made its mark in Prague too, because a magician/escape artist like Houdini has as much ownership over the concept of art as a painter, writer or musician and all of them in a way are working towards the same thing which is to try to escape from the confines of the physical world to a world where there are no boundaries, a world where all the shackles binding people can be unlocked. This is why Joe thinks of it as 
"...the expression of an yearning that a few magic words and an artful hand might produce something - exempt from the crushing strictures, from the ills cruelties, and inevitable failures of the greater creation"

And considering the fact that this yearning is what kept Joe sane among all that he had to endure, can one just brush off comics as escapist entertainment? Like in all genres you get good, bad and indifferent works in comics too and can one say that a masterpiece of comic fiction is inferior to a mediocre work of fiction just because fiction does not have funny characters parading around in 'long underwear' (in Chabon's words) and because adults read it? Clay and Joe differ on their take on the comics genre. Clay is never comfortable working in the comic book industry,which he looks down as inferior, which is why he takes to writing an novel which is unpublished(and probably will remain so), the genre is but a way for him to break the shackles of his life and in a way he is also subconsciously accepting it as art, but unable to tell it aloud due to his fear of supposed ridicule. An example of it is that even his mother isn't too impressed by his work and the money it brings, she is always thinking that the latest comic issue could be the last one and the comic fad would end soon.

It is said that 'God is in the details', but in this novel (as in other works of Chabon that I have read), 'God and sometimes Devil both are in the details'.  The painstaking narrative that Chabon builds comes off for most of the time but in some cases the devil rears it's head putting us off. Lets take the happenings after Joe learns of his father's death. His survivor guilt becomes even more heavy and in a streak of masochistic behavior, he sets off on a series of violent confrontations with Germans in New York which results in him being beaten black and blue most of the time. The point here is not whether a person would behave like this (though I believe this to be a perfectly valid reaction and I am a person who is willing to accept the concept of two moons in the sky) and to me the reader of any fiction cannot always expect the experiences and reactions of the characters to be in sync with his, if that were the case the whole purpose of fiction is lost then. The reader has to be willing to be subjugate his experiences to that of the authors and see if the author convinces him (which again is a subjective thing). What happens here is that after the first or second time when Joe gets into a scrap, we feel a disconnect from his emotions, all the events that follow after that (which run into nearly one whole chapter) seem to be just another trick of Chabon to get more of our emotional investment into Joe. And surprisingly Chabon goes in for cliches or set tropes in managing certain events, like when Clay and Tracy Bacon get together. It happens on a stormy night amid thunderstorms, when Clay is on the watchtower doing observer duty. In general, the heterosexual relation between Joe/Rosa is handled much better than the one between Chabon/Tracy. Given that Clay is unsure about his orientation, there will some awkwardness in his relationship, but the awkwardness that we feel is sadly in the writing and not in the relationship itself. This part and the one about racial supremacists in America are when one feels that the author was a bit unsure as to how to proceed and compensated for it by laying it on thick for most of the time. One can contrast this with the brutal things that happen when Clay/Tracy and a few other of their gay friends go to a friends manor and they are raided by the police. In an depraved abuse of power, two G-men who are not part of the original party use the raid to sexually abuse Clay, thus scarring him from which he doesn't recover for a very long time. Even the scenario of two G-men sexually abusing   men on a raid may seem far fetched to some who cannot even imagine such things, but in this scenario Chabon makes a very convincing case for us to accept it and thus identifying with Clay's pain even though you may not be gay. This alchemy where the narrative turns into our emotional connect with the characters does not happen always in the authors rendering of Clay's relationship. 

As Clay and Joe try to get the lives on track and seem to be succeeding in it a couple of events happen in their lives which changes them entirely. A minor crib here, that both events happen on the same day could be accepted as something valid or a leeway to artistic license, but when it is said that it happens in conjunction with Pearl harbor, it becomes a bit too much and one can see right through the author's positioning of this coincidence which will fuel the last part of the novel and as such the dramatic effect makes sense. The last part of the novel takes place about a decade after Pearl Harbor, where we see Sam working as a editor in a different organization. With the war over, the demand for superheroes falls and the golden age of the comics (and the duo too) comes to an end. In what could be the worst possible humiliation for an artist, Sam is now working in mediocrity, working just to make ends meet.  An artist can be felicitated as a genius or denounced as crap, in both cases he will not lose his own sense of worth which will continue to propel him. But when he gets mired in mediocrity, when no one any great opinion, whether positive or negative to offer about him, it is when the actual decaying of the artist starts and it is something no artist can handle. His attempts at writing a 'literary novel' has also got stuck and he has no hopes on that end too to gain what he feels as respectability. Joe comes into his life again and after a hiatus, Clay,Rosa and Joe meet at Clay's house. This meeting has the purest and most heartfelt dialogue spoken by anyone at any point in this novel. When Joe tries to explain his diffidence on certain things, Clay bursts out
"Christ, Joe, you fucking idiot," Sammy said. "We love you".

 succinct sentence yes, but loaded with so much meaning and love. What else can one say when we meet someone we love a lot after a long time, there is no way we are going to give a bloody speech. First the repressed anger comes and then the love and that's probably enough to set things, if not completely like before, at least near to what they were earlier. As Chabon says in a different context in the novel
The true magic of this broken world lay in the ability of the things it contained to vanish, to become so thoroughly lost, that they might never have existed in the first place

Only love can beat this magic, only love can make sure that even vanished things can exist albeit in imagination so that in the rare case that the vanished thing reappears it has someone to relate to as its own, someone to love and to be loved by without fear of making mistakes, because what finally is any life with no one to share it with. It is this fear, diffidence of Joe about the various mistakes that one makes that is allayed in the statement by Sam. It is one of those rare fictional point, where one the reader, author and characters become one and where one is not sure whether it is the author or character or we the reader who is living in the pages of the book. The line may seem simple in isolation, but to one who has read the book already the impact of this statement would be clear, giving his knowledge of what all happened in their lives. Even now, writing this particular paragraph gives much the same emotional high I had when I first read it.

The novel is about multiple things, but one things stands out and it is as one of the comic book character created by the duo says
"there is no force more powerful than that of an unbridled imagination".  This in a nutshell is what the novel is all about, the capacity of humans to imagine even the most outlandish things and try to break the barrier between imagination and reality, after all haven't most of the great things in the world begun as just the figment of someones imagination before they became reality. This is the force that drives Joe to imagine to somehow bring his family back, it is the force that drives Clay to imagine and build a comic empire even when both he and Joe are little more than kids, this is the power. We don't always succeed in making our imaginations come true and Clay/Joe are no different. They succeed some, fail some, the fire of their imagination extinguishes sometimes, but the embers are always there, waiting for an opportunity to glow once again and the novel's ending gives us a glimpse of that ember which one hopes will burn brightly in the future as we take leave of the characters.

Wednesday, June 1, 2011

The Yiddish Policemen's Union - Micheal Chabon

The genre of crime/mystery fiction seems to have fascinated our more reputed writers of general fiction in the modern era(I use 'general' here instead of 'literary' since the latter sounds snobbish). From Borges to Eco to Orhan Pamuk several writers have written works based on this genre. But can we classify 'The Name Of the Rose' or 'My Name is Red' as conventional crime fiction? The base is crime yes, but the writers expand the boundaries, in fact tear open conventions of crime fiction so that their works become a new genre of sorts themselves. We mostly see the inventiveness and even playfulness of the writers when they attempt such works. The crime becomes a secondary part in the works. But a true blue crime fiction or noir? They are pretty rare. Of such works Jonathan Lethem (Motherless Brooklyn) and Micheal Chabon (The Yiddish Policemen's Union) tend to tread the path of hardboiled crime fiction genre. The authors bring in their own twist to the genre, while not deviating too much from the established conventions of the genre.
The Yiddish Policemen's Union starts of a alternate history premise. It is set in 'Sitka in Alaska'. The premise is that at the end of world war II, Jews were settled in Sitka instead of at Jerusalem. This is apparently based on a actual proposal about settling Jews in America, that came up in the 1940's. (It was not carried out in the end). Chabon starts off with this unique setting. Sitka is now a Jewish settlement, with the Jews living together with the native americans of the area. The main protagonist is 'Meyer Landsman', a typical hardboiled police detective with all the traits that such a detective has in novels. He is alcoholic, divorced (his wife is his superior), does not play by the rules and what not, basically a pest who some how gets things done his way and for that has to be put up with. A murder has occurred in the hotel that he is staying. The victim is Mendel, who was supposed to be a  'Tzaddik ha-Dor'. (This refers to a person who could be the potential messiah for the Jews. Such a person is supposed to be born every generation). The story kicks off as Meyer starts the investigation.
Chabon also weaves in the story of the entire jewish community which is facing another exile. The lease given to them for Sitka is set to expire in the next few months and the American government would not renew it. People are applying to go to other countries or to migrate within America itself. Chabon paints a picture of an almost claustrophobic and insular Jewish community who are very tightly integrated and at despair about the future. Suffice to say that Meyer is not worried about it. As a typical fictional detective, he has his own emotional baggage to carry (his sister's death, his relationship with his deceased father) that solving crime seems to be the only way out for him to survive that baggage. Mendel is found to be the son of a rebbe who is the head of one of most powerful crime syndicate in Sitka. He antagonizes Mendel's father and as a result is told to lay off from investigating the crime. He continues with it and as a result is suspended from work. Being the classic stubborn type he still continues with his investigation in private and starts piecing together the details about Mendel's life.
Along with the normal set pieces of crime fiction, Chabon gives a moving account of Mendel's story, his glorious childhood to youth when he was revered by most people who came in contact with him, the expectancy of great things from him and his fall from grace just before his marriage. He runs away from home before his marriage and his father disowns him. We get a hint that his sexual orientation could have played a role in it, but it's not explicit. At this point, we find ourself empathizing with Mendel more, how would it have been to carry the burden of an entire race as being the chosen one, being under scrutiny always, always expected to be perfect. It is in these pages, that Chabon pushes the boundary of crime fiction to something more. I found myself transfixed by Mendel's story up to the point and the crime took a back seat. More than Meyer, Mendel fascinated me. (To digress here a bit, the victim in 'My Name Is Red' did not affect me as much, though he even talks to us in the beginning. This again could be because, the author there was more concerned about things other than the victim or the mystery, namely the Ottoman art and the nature of painting itself).
During the course of the investigations, Meyers gets shot at, imprisoned, has a chase, gets beaten and bruised, but still on the move and determined to get the end. (Your typical set pieces). He also comes to know some new details about his Sister's death. He uncovers a diabolical plot, but is not able to divulge it. He is released on making that promise. Ironically it does not seem to have anything to do with Mendel's murder. Meyer reunites with his wife, but is still nagged by the thought of the murder being unsolved. Finally he cracks it, which is quite surprising to say the least. The novel ends with Meyer ready to face life wherever it takes him in the upcoming exodus. 
The novel worked for me as a generic fiction and not as pure crime fiction. Chabon paints an minutely detailed picture of the Jewish community in exile, their quirks, makes his characters flawed in more than one ways, which in turn makes them more believable. Meyer, with his template habits could be a worthy successor to Philip Marlowe. The relationship between the natives of Alaska and the Jews is also brought out well, in some cases humorously. One sees both the groups being racist towards each other, in an almost unconscious manner, which is bit ironic when we consider the Jews being a bit racist in their day to day life. Chabon uses some beautiful similes throughout the novel, one other thing we cannot find in your conventional crime fiction.  But these same things hinder the novel from being a great crime fiction. At some point, you just want to move ahead in the story instead of getting more character portraits. At the end I was not too interested in the murderer, but was caught up in the individual characters lives. This is surely a triumph of his story telling, but from  the perspective of a crime fiction aficionado, it was a bit of a letdown, though the author is not the reason for it. If you approach the novel as a generic one, with not much expectations on the crime front, you would like this. This is probably the closest one could get while trying to straddle 2 genres, without disappointing much in either. For hardcore crime fictions fans however, it better to stick to Raymond Chandler, Henning Mankell, Ian Rankin and the other masters. 


Chabon has also tried out the intermixing of genres with his 'The Amazing Adventures Of Kavalier And Clay' which concerns comic books juxtaposed with the second world war and the holocaust. The life of a comic book hero rescuing Jews contrasts with the reality of that time. 

Micheal Chabon's website is www.michaelchabon.com.