Tuesday, May 10, 2016

லிடியா டேவிஸ் (Lydia Davis) குறுங்கதைகள் – ஒரு விரிபார்வை

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/05/02/lydia-davis-2/)
-----------
We are sitting here together, my digestion and I. I am reading a book and it is working away at the lunch I ate a little while ago.
Companion‘ என்ற தலைப்பிலான லிடியா டேவிஸின் (Lydia Davis) ‘குறுங்கதை’ இது. கதையா, நாட்குறிப்பா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதில் நாம் என்ன வாசிக்க முடிகிறது?. கதைசொல்லியும் அவருடைய செரிமானமும் ஒருவருக்கொருவர் துணை என்று Companion என்ற தலைப்பை வைத்து புரிந்து கொள்வதோடு, புத்தகமும், கதைசொல்லியும் ஒரு இணை, வாசிப்பும் செரிமானமும் மற்றொரு இணை என்றும் வாசிக்கலாம். வெளிப்படையாகச் சுட்டப்படாவிட்டாலும், ‘working away at the lunch’ என்பதை, உண்டதை வெளிக் கொணரும் குமட்டல் நிறைந்த எழுத்தை கதைசொல்லி வாசிக்கிறார் என்ற பிழைவாசிப்பையும் நாம் நிகழ்த்தக்கூடும். செவிக்குணவில்லாதபோது மட்டுமே வயிற்றுக்கு ஈவதை டேவிஸ் கொஞ்சம் மாற்றுகிறார் என்றும் இது குறித்து பேசிப் பார்க்கலாம் இல்லையா? .
Away from Home (தலைப்பு)
It has been so long since she used a metaphor!
இந்த நொடிக்கதையின் ஒரே வரியான ‘உருவகத்தை அவள் உபயோகித்து பல காலமாகி விட்டது’ என்பதை தலைப்போடு பொருத்தி வாசிப்போமே. எழுத்தாளனுக்கு உருவகங்கள் மிக நெருக்கமானவை என்பதால், அதை அவள் உபயோகிக்காமல் இருந்துள்ளது, தன் தாய் (தன் சொந்த) வீட்டிலிருந்து/ நாட்டிலிருந்து மிகவும் விலகிப் போய்விட்ட உணர்வை அவளுக்குத் தந்திருக்கக்கூடும் என்ற வாசிப்பை நிகழ்த்தலாம். தலைப்பில் உள்ள ‘Home’ ஐ உருவகமாக வைத்துப் பார்த்தால், Away from Home போன்ற உருவகம் கொண்ட தொடரைப் பல காலம் கழித்து இப்போதுதான் எழுதி இருக்கிறார் என்றும் தலைகீழாக வாசிக்கக்கூடுமா?
Spring Spleen (தலைப்பு)
I am happy the leaves are growing large so quickly.
Soon they will hide the neighbor and her screaming child.
அண்டை வீட்டார் தன் கண்களில் படமாட்டார்கள் என வசந்த – இனிமையின் – காலத்தின், நாம் எண்ணிப் பார்த்திராத நன்மையை டேவிஸ் முன்வைக்கிறார். அதில் ‘screaming’ என்ற பெயர் உரிச்சொல்லின் (adjective) தேவை என்ன? அண்டை வீட்டுப் பெண்ணும் அவள் குழந்தையும் கண்ணில் பட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே? இலைகள் உருவத்தை மறைத்தாலும், சத்தத்தை மறைக்கக்கூடுமா, அந்தளவிற்கு அடர்த்தியாக செடிகள், பல குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் வளர்ந்திருக்குமா என்று கேட்டு இந்த குறுங்கதையை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். குழந்தையின் அலறல் எப்படியும் கேட்கப் போவதால், தான் இப்போது உணரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, அரைகுறையானது என்பதை கதைசொல்லி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை சுட்ட ‘screaming’ஐ பயன்படுத்தி இருக்கிறாரா?
Examples of Remember (தலைப்பு)
Remember that thou art but dust.
I shall try to bear it in mind.
(Italics as in print edition)
முதல் வரியில் உள்ள அறிவுரைக்கான, (அரைமனதான?) ஒப்புதலாக இரண்டாவது வரி உள்ளது. இது ஒரு வாசிப்பு. இரண்டு வரிகளையும் தலைப்போடு பொருத்திப் பார்த்தால், அவை தனித்தனியே கூட அர்த்தம் கொள்கின்றன, அதாவது தலைப்பில் உள்ள ‘Examples’ இந்த இரண்டு வரிகள். சில வார்த்தைகள் ‘Italics’ல் குறிப்பிடப்பட்டுள்ளது அவசியமான ஒன்றா அல்லது சொல்ல வருவதை வாசகனுக்கு திணிக்கும் முயற்சியா என்றும் வாசகன் கேள்வி எழுப்பக்கூடும். எப்படி இருப்பினும் நம் வாசிப்பை ‘Italics’ எப்படி பாதிக்கின்றன போன்ற கேள்விகளையும் இங்கு எழுப்பலாம்.
Insomnia (தலைப்பு)
My body aches so-
It must be this heavy bed pressing up against me
தூக்கம் வராத ஒருவர் அதற்கான காரணமாக, படுக்கையைச் சுட்டுகிறார் – அவருக்கு வேறேதும் உடல்/ மனரீதியான காரணங்களும் இருக்கலாம், ஆனால் வசதியாக படுக்கை மீது பழி போடுகிறார் – என்பது இந்தக் கதையின் முதல் வாசிப்பாக இருக்கக்கூடும். ‘against me’ என்று சொல்லப்படும்போது, படுக்கை எப்படி ஒருவர் மீது அழுத்த முடியும், கரடுமுரடான படுக்கை என்றாலும், படுப்பவர்தானே அதன் மேல் அழுந்தி இருக்கிறார் என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். அப்போது உடல் வலி என்று வருந்துவது, அவ்வலியால் தூங்க இயலாமல் துன்புறுவது படுக்கை நிலை கொண்டிருக்கும் தரை போலிருக்குமோ? அப்போது, மண்ணின் சுமையே தன்னை அழுத்துவதாக வாசிக்கலாம்.
The Busy Road (தலைப்பு)
I am so used to it by now
that when the traffic falls silent,
I think a storm is coming.
வரிகள் மடக்கி எழுதப்பட்டு இருப்பதால் மட்டுமல்ல, இது உருவாக்கும் துல்லியமான பிம்பமும், அதில் பொதிந்துள்ள உணர்வும் கவித்துவ கணத்தை நினைவுபடுத்தக்கூடும். ‘so used to it’ என்று நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் கதைசொல்லி ஏன் ‘think’ என்று தயக்கத்துடன் /சந்தேகத்துடன் முடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் போக்குவரத்து அமைதியாகும்போது, புயல் வரப்போகிறது என்று நினைத்து அது பொய்த்து விடுகிறது என்பதாக இந்த சந்தேகத்தைப் புரிந்து கொள்ளலாமா? அல்லது இரைச்சலுக்குப் பழகிய செவிகளை மௌனம் அச்சுறுத்துகிறது என்றோ, மக்கள் திரளுக்கு நடுவே வாழ்ந்து பழகியவர்கள் தனிமையை அஞ்சுகிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா?
இன்னொரு கவிதையையொத்த குறுங்கதை.
Head, Heart (தலைப்பு)
Heart weeps.
Head tries to help heart.
Head tells heart how it is, again:
You will lose the ones you love. The will all go. But
even the earth will go, someday.
Heart feels better, then.
But the words of head do not remain long in the ears of
heart.
Heart is so new to this.
I want them back, says heart.
Head is all heart has.
Help, head. Help heart.
எல்லாருக்கும் தெரிந்த கதைதான். மூளை சொல்வதை மனம் கேட்பதில்லை, அப்படியே கேட்டாலும் அது நீடிப்பதில்லை. மனக் குரங்கு மீண்டும் வெளியே உலவ ஆரம்பித்து விடுகிறது. ‘Heart is so new to this’ என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கும். மனம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பதால், புதிய புதிய வருத்தங்கள் அதற்குள் தோன்றுகின்றன அல்லது பழைய வருத்தங்கள் மீண்டெழுகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் மனம் துயர் கொள்ள, அதை மீண்டும் மூளை தணிக்க என இது தொடர்கதையாக நீள்கிறது. எனில் இங்கு யார் ‘Sisyphus’, தொடர்ந்து துயருறும் மனமா அல்லது துயரைத் துடைத்து சில காலத்திலேயே மீண்டும் அதே துயர் துடைத்தலில் ஈடுபடும் மூளையா?
டேவிஸ் அதிகமும் குறுங்கதைகள்/ நிமிடக்கதைகள் மட்டுமே எழுதி இருக்கிறார், அதிலும் சொல்/ மொழி விளையாட்டை மட்டுமே நிகழ்த்தியுள்ளார் என்று அவர் எழுத்தைக் குறித்த பிழைத்தோற்றத்தை இந்தக் கட்டுரை தரக் கூடும் .Lonely என்ற “No one is calling me. I can’t check the answering machine because I have been here all this time. If I go out, someone may call while I’m out. Then I can check the answering machine when I come back in,” குறுங்கதையில் அவர் தனிமையை மட்டுமல்ல, அதை தவிர்க்க எதைப் பற்றிக்கொள்வது என்ற மனதின் வேட்கை இட்டுச் செல்லும் உளச் சிக்கலையும் சித்தரிக்கிறார். ‘A Strange Impulse’ என்ற ஒரே ஒரு பத்தி அளவு கதையில் வெய்யில் காயும் பரபரப்பான கடை வீதியில், திடீரென கடை முதலாளிகள் காதைப் பொத்திக் கொள்கிறார்கள், வீதியில் உள்ள மற்றவர்கள் அடித்துப் பிடித்து ஓட ஆரம்பிக்கிறார்கள். விரைவில் முடிவுக்கு வரும் இந்த பித்து நிலை அன்றாட வாழ்வின் எரிச்சலுக்கான வடிகாலாக சுட்டப்படுகிறது.
இல்வாழ்கை, நட்பு, உள்முகப் பரிசோதனை , தனிமை என வாழ்வின் பல பரிணாமங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணரும் டேவிஸ், சிறுகதையின் வழமையான அளவிலும் சரி, குறுநாவலின் அளவிலும் சரி கதைகள் எழுதியுள்ளார். புனைவின் தெளிவான அம்சங்கள் கொண்டவை , புனைவும் நிஜமும் இணைபவை என சொல்லத்தக்கவை, கவிதை வடிவுக்கு நெருக்கமானவை, ‘What you learn about the Baby’ போன்ற வகைப்படுத்த முடியாதவை என பல்வேறு நடை, தொனி கொண்ட கதைகள் அவர் புனைவுலகில் உள்ளன. குறுங்கதைகள் அவர் புனைவுலகின் குறிப்பிடத்தக்க, ஆனால் அதை பிரதிநிதப்படுத்தும், ஒரே அம்சம் கிடையாது. கவிதை/ புனைவு/ அ-புனைவு என அனைத்தின் வரையறைகளையும் ஒன்றுடன் ஒன்று முயங்கச் செய்து கலைத்துப் போடும் டேவிஸின் எழுத்தை வகைப்படுத்த முயல்வது என்பது வியர்த்தமாகவே முடியும்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் டேவிஸின் புனைவுலகைப் பற்றிய ஆழமான குறுவெட்டு பார்வையை தருவதோ , அவரது எழுத்தின் கச்சாப் பொருட்கள், கேன்வாஸ், நுட்பங்கள் பற்றியோ பேசுவது அல்ல, தன் குறுங்கதைகள் மூலம் வாசிப்பை அவர் எவ்வாறு வாசகனை அவன் அறிந்திராத பாதைகளில் பயணிக்கச் செய்கிறார் என்பதை மட்டும் பார்ப்பதே. தங்களின் அளவைச் சார்ந்து குறுங்கதைகள் இயல்பாகவே அதற்கு தோதாக உள்ளன. அவை ஒரு சிறிய, பூட்டிய கதவை வாசகன் முன் வைக்கின்றன. அதை திறந்து உள்நுழைபவன் வானமே கூரையாய், வெளியே நாற்புற சுவராய் இருக்கும் முடிவில்லா -உலா வர வழிகளற்ற பாதைகள் கொண்ட – வீட்டினை காண்கிறான். அதனுள் அவன் தேர்ந்தெடுத்து செல்லக் கூடிய பாதைகளும், திசை தப்பிய அலைதலும் – அதற்கிணையான இந்தக் கட்டுரையிலேயே இருக்கும் பிழைவாசிப்பின் சாத்தியங்களும் – மட்டுமே இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

Tuesday, May 3, 2016

உள்ளூரில் ஒற்றன் – தேஜூ கோலின் Every Day is for the Thief சிறுகதை தொகுப்பு - Teju Cole

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/04/24/teju-cole/)
------------
And there, behind it, marched so long a file
Of people, I would never have believed
That death could have undone so many souls.

என்ற 'இன்ஃபெர்னோவின்' (Inferno)   வரிகளை 'Every day is for the thief' கதைசொல்லி ஒரு திருமண நிகழ்வின்போது நினைவு கூர்கிறார். பல்லாண்டுகளுக்குப் பின் தன் தாய் நாடான நைஜீரியாவிற்கு திரும்பியிருக்கும் அவர் அணிவகுத்துச் செல்லும் வரிசையில் காண்பதுஇறந்தவர்களை மட்டுமல்லஉயிரோடிருந்தும் அவர் நினைவுகளிலிருந்து விலகியவர்களையும்தான். தன் கடந்த காலத்தினூடாக ஒரு பயணமும்தன் நாட்டின் நிகழ்காலத்தினூடாக இன்னொரு பயணமுமாக அவர் விவரிக்கும் - எந்தத் வெளிப்படையான தொடர்பும் இல்லாத 27 அத்தியாயங்கள் கொண்ட  - இந்தச் சிறு நூல் 'குறுநாவல்என்று வகைப்படுத்தப்பட்டாலும்நினைவுக் குறிப்புகளாகவும் பார்க்கப்படும் சாத்தியம் உண்டு . இந்த விதத்தில் அசோகமித்திரனின் 'ஒற்றனைஒத்திருப்பதோடுஅந்நூல் வாசகனுள் உருவாக்கும் உணர்வையும்எழுப்பும் கேள்வியையும் இங்கும் எழுப்புகிறது. ஒற்றன் எத்தேச்சையாக தோன்றினான் என்று அ.மி சொல்வதற்கு நேர் மாறாக"I’m very interested in fictional forms that challenge our idea of what fiction is," .... "I think a lot of people will read Every Day Is for the Thief and feel that it’s nonfiction, but that confusion is intentional," என்று இந்நூல் குறித்த ஒரு பேட்டியில் கோல் சொல்கிறார்.

சந்தையில் குழந்தையைத் திருட முயன்றதாகக் கூறிடயரொன்றினுள் திணிக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகளின் கண்முன் எரித்துக் கொல்லப்படும் 11 வயது சிறுவன்திருட வருவதற்கு சில நாட்களுக்கு முன் அவ்வீட்டின் நாய்களை விஷம் வைத்து கொல்பவர்கள் (உண்மையில் அது திருட்டு நிகழப்போவதற்கான சமிக்ஞையாக புரிந்து கொள்ளப்படுவது நகைமுரண்தான்),   தாங்கள் நுழைந்த முதல் வீட்டிலிருந்து ஒருவனை அழைத்துக் கொண்டுஅவன் மூலம் அடுத்த வீட்டிலுள்ளவரை கதவைத் திறக்கச் செய்து அங்கும் கொள்ளையடித்துபிறகு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு செல்வதும் - அதிகாரத்திற்கு பயந்த காலம் கடந்து போய் சக குடிமகனையே யார் என்ன செய்வார்கள் என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையின் - மிகைப்படுத்தப்பட்ட உண்மையின் கோர புனைவாக தோன்றும் அதே நேரத்தில்உண்மையில் 11 வயது சிறுவன் எந்த தயக்கமும் இல்லாமல் பல பேர் முன இப்படிக் கொல்லப்படக் கூடுமோ என்ற பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.  இத்தகைய ஒரு குழு மனப்பான்மையின் தீர்ப்பை  Lagos நகரை பின்புலமாக வைத்து புனையப்பட்டுள்ள பென் ஒக்ரியின் (Ben Okri)  'Stars of the new Curfew' தொகுப்பில் உள்ள 'When the lights return' கதையிலும் காண முடிகிறது. இரு நூல்களிலும் நைஜீரியாவின் நிகழ்கால அவலத்தை காண முடிகிறது என்றாலும்,   ஒக்ரியின் தொகுப்பைப் போல -கொடுங்கனவுகளால் நிறைக்கப்பட்டஉண்மையின் சாயல் கொண்ட - புனைவுலகமாக 'Every day is for the thief'யும்  முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 

முதல் பார்வையில்கோபம்/ ஆற்றாமை தவிர்த்த வேறு எந்த உணர்வெழுச்சியும் இல்லாதஅன்றாட நைஜீரிய நாட்களின் துல்லியமான -நூலில் அவர் இணைத்துள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களை ஒத்த - சித்திரத்தை  நூலெங்கும் அவர் அளிப்பதன் மூலம்   புனைவின் சாயலை முடிந்தளவுக்கு குறைப்பது முதல் காரணம். 'ஒற்றனின்காணக்கூடிய புனைவின் அம்சத்தைவிட இதில் குறைவாகவே பார்க்க முடிகிறது என்றே சொல்லலாம். பேருந்தில் பயணிக்கும் கோல், 'Michael Odjante'ன் நூல் ஒன்றை வாசித்தபடி அதில் ஏறும் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாமல் போனாலும்அந்தப் புள்ளியிலிருந்துஅவள் இப்புத்தகத்தை எங்கு வாங்கி இருக்கக்கூடும்நைஜீரியர்களின் வாசிப்புப் பழக்கங்கள் (அல்லது பழக்கமின்மை) குறித்த சிந்தனைகளுக்குச்  செல்கிறார். தன்னையொத்த ரசனை கொண்ட ஒருவரைக் கண்டவுடன் ஏற்படும் இயல்பான ஆர்வத்தில்அவளிடம் பேசுவதற்கான விஷயங்களைதன்னுள்ளேயே (monologue) பேசிக்கொள்கிறார்.   3 பக்கங்களில்நிதானமான  நடையை  கொண்ட இந்த அத்தியாயம்ஒரு சந்திப்பைப் பற்றிய அனுபவக் குறிப்பாக வாசிக்கப்படவே அதிகம் வாய்ப்புள்ளது. 

அருங்காட்சியகத்திற்குச் செல்பவர்அது அரிய கலைப்பொருட்களின் சேகரிப்பாக இல்லாமல்ஏனோ தானோ என்று  அரசின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டிருப்பதையும்அதன் நீட்சியாக வேலை செய்பவர்களின் அசிரத்தையையும் பதிவு செய்கிறார்.  அங்கு அவர் கண்டதாக குறிப்பிடும் ஒரு சில விஷயங்கள் புனைவாகசற்றே மிகைப்படுத்தப்பட்டவையாக - அங்கு வேலை செய்யும் பெண் கோல்லை கண்டு கொள்ளாமல் ஸ்தோத்திர துதியை சொல்லியபடி இருக்கிறார் -  இருக்கக்கூடும்ஆனால் அவர் அத்தியாயம் முழுதும் சுட்டும்எந்த  கலைப்பிரக்ஞையும் இல்லாத ஒரு சூழல்அதற்கு அபுனைவின் தொனியையே தருகிறது. "Why is history uncontested here? There is no sight of the dispute over words, that battle over versions of stories that marks the creative inner life of a society. Where are the contradictory voices?" என்று வேறொரு இடத்தில் கோல் கேள்வி எழுப்புவதை புனைவின் குரலாக அல்லாமல்நிஜத்தின் ஆற்றாமை நிறைந்த குரலாகவே கேட்க முடிகிறது. 

உணர்வுபூர்வமாக அனைத்திலிருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் விலகியே இருக்கும்ஆனால் எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் அவதானிப்புக்கள் எனும் தொனி நூலில் விரவி இருப்பதும் அதற்கு  நாட்குறிப்பின் சாயலைத் தருகிறது. விலகியே இருத்தல் என்பதின்  நீட்சியாகநம்பிக்கையின்ஆசுவாசத்தின் சுவடே இல்லாத எதிர்மறை நோக்கு மட்டுமே இந்நூலில் உள்ளதுமுதலாம் உலக நாடுகளில் பல்லாண்டுகள் வசித்து தாய் நாடு திரும்புபவர்களிடம் காணக்கூடிய அதே சலிப்பைத்தான் கோலும் வெளிப்படுத்துகிறார் - அமெரிக்காவில் இருந்து புறப்பட நைஜீரிய தூதரகத்தை அணுகும்போது லஞ்சத்தை எதிர்கொண்டு கோல் துணுக்குறுவதை அமெரிக்காவில் லஞ்சமே இல்லையா என்ற கேள்வியோடு எதிர்கொள்ள முடியும்என்ற மேலெழுந்தவாரியான விமர்சனம் உருவாகுவதும்  சாத்தியமே.  இந்த விமர்சனம் காத்திரமானதா என்பது ஒருபுறம் இருக்கவாசகன் மேலோட்டமாக உணரக்கூடிய  இத்தகைய கசப்பும்கூட,- புனைவு அளிக்கக்கூடிய முப்பரிமாணச் சித்திரம்பன்முகப் பார்வைகள் - இவை இல்லாத,  எதிர்மறை அனுபவங்களின் தொகுப்பாகவே நூலை முன்னிறுத்தக் கூடும். 

வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஏதோ ஒரு பிணக்கு/ காயம் காரணமாகவே அவர் நாட்டை நீங்கினார் என்பதைச் சுட்டும் சில இடங்கள் நூலில் உள்ளன என்பதால்  அவர் வெளியாளாக அனைத்தையும் கவனிப்பது போல் வாசகனுக்குத் தோன்றுவது கோலின் மனநிலை சார்ந்து  இயல்பான ஒன்றே.  அதே போல் "The house of course is unchanged. Memory and the intervening years many of which I have spent in cramped English flats and American apartments, limitations I have endured like a prince in exile.  Now, in the cool interior of this great  house in Africa, proper size is restored."  போன்ற வரிகளில் உள்ள வலியையும்அவர் தன்னெஞ்சிலிருந்து நைஜீரியாவை முற்றிலும் அகற்றவில்லைஅகற்றவும் முடியாது என்பதையும் உணர முடியும். 


நூலின் அபுனைவு தோற்றத்திற்கு அங்கங்கு இணைக்கப்பட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களும் வலு சேர்க்கின்றன. இந்தப்

புகைப்படத்தில் இருப்பவர் தான்  'Michael Odjante'ஐ படித்துக்கொண்டிருந்தவராகவோகலங்கிய


இந்தப் புகைப்படம்புகைமூட்டமாக உள்ள கோலின்  கடந்த காலத்தையும், துலக்கமாக விளங்கிக்கொள்ள முடியாத நைஜீரியாவின் நிகழ் காலத்தையும் சுட்டுவதாகவும்  இருக்கலாம். அவ்வப்போது இடையிடும் இத்தகைய புகைப்படங்களை உணர/ புரிந்து கொள்வதற்காகவாசிப்பை சில கணங்கள்   நிறுத்தி விடுகிறோம். கோல் சொல்வது போல் 'புனைவுஎன்றால் என்ன என்பது குறித்த நம் கருத்தாக்கங்களுக்கு சவால் விடுபவையாக இவை உள்ளன.  

புகைப்பட உத்தியில் மட்டுமின்றி,  திடீர் பயணம்அதனூடான அனுபவங்கள்அதன் விளைவான  சுயபரிசோதனை செய்யும்  தன்னுரைகள் (introspective monologue) போன்றவற்றால் உருவாகும்,  புனைவா/அபுனைவா என பிரித்தறிய இயலாத நூலின் இறுதி வடிவம்என கோலின் எழுத்தின் கட்டமைப்பிலும்நடையிலும்   சீபால்ட்டின்  (Sebald) தாக்கத்தை காண முடிகிறதுசீபால்ட் தன்னை பாதித்தவர்களில் ஒருவர் என்று கோலும் சொல்கிறார்.  குறிப்பாக கோலின் முதல் நூலான 'Open City'ல் இந்த தாக்கத்தை இன்னும் அதிகமாக உணர முடிகிறது. கோலின் எழுத்தே சீபால்ட்டின் தழுவல் எனவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.  இந்தக் கட்டுரை இந்நூலின் வகைமை குறித்த சாத்தியக்கூறுகளையே மையமாகக் கொண்டுள்ளதால் இந்நூல் பற்றிய விரிவான பார்வையையும் (உண்மையில் அவர் நூல் முழுதும் எதிர்மறை உணர்வோடு , கசப்பை சுமந்தலைபவராநூல் ஒற்றைத்தன்மை கொண்டதா  போன்ற கேள்விகள்)சீபால்ட்/ கோல் இடையேயான  ஒப்புமை/ வேற்றுமையையும்  பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.  



மனச் சோர்வடையச் செய்யும் பெரும்பாலான அனுபவங்களுக்கிடையில் இசை/நாடகத்திற்காக இயங்கும் ஒரு தனியார் சங்கம்(பணக்காரர்களே  சேரக்கூடியதாக அச்சங்கம் இருப்பதில் உள்ள முரணை கோல் உணர்ந்தாலும், இப்படியேனும் கலைக்கு வடிகாலாக ஒரு இடமாவது உள்ளதே என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார்)இசைத்தட்டுக்களை நேரடியாக விற்பனை செய்யாமல் அவற்றை பிரதி எடுத்து விற்கும் கடைக்கு மாற்றாக,  சட்டபூர்வமாக இசைத்தட்டுக்களைஇலக்கிய நூல்களை  விற்பனை செய்யும்,  இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும்  கடை போன்ற ஒரு சில விஷயங்களைப் பார்க்கும் போது "The most convincing signs of life  I see in Nigeria connected to the practice of the arts" என்று நூலின் ஒரு அத்தியாயத்தில் கோல் உணர்கிறார்.  அதையே இறுதியில் இந்த நூல் குறித்து நாமும் உணர முடிகிறது.  எரிமலையென கொதித்துருகிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் புறச் சித்திரத்தோடுஎரிகுழம்பென அனைத்தையும் எரித்துக்கொண்டிருக்கும் சமூக பொருளாதாரச் சூழலுடனேயான  பயணங்களின் மூலம் உருவாகும் அகச் சித்திரத்தையும் உயிர்ப்புடன் தீட்டியுள்ள கோலின் கலை புனைவா/அபுனைவா என்ற கேள்வியை ஒரு கட்டத்தில் தேவையற்றதாக்கி (moot point)  விடுவதோடு,  புத்தாயிரத்தின் புதுக்குரல்களில் குறிப்பிடத்தக்கவராக அவரை முன்னிறுத்துகிறது.